வியாழன், 28 பிப்ரவரி, 2013

சங்கீத சங்கதிகள் - 16

மாமாங்க மாறுதல்கள் ! -1

மாலி-சில்பி

’விகடன்’ 1945-இல்  வாரந்தோறும் வரும் ஒரு புதிய ஓவியப் பகுதியைத் தொடங்கியது. “மாமாங்கத்துக்கு மாமாங்கம்’ என்ற தலைப்பில். ( மாமாங்கம் என்றால் பன்னிரண்டு ஆண்டுகள்.)

சங்கீத வித்வான்களின் தோற்றங்கள் ஒரு மாமாங்கத்தில் எவ்வளவு மாறிவிட்டன என்பதை ஓவியங்கள் மூலம் பதிவு செய்வதே இதன் நோக்கம். 1933-இல் மாலி வரைந்த  வித்வான்களின் படங்களையும், 1945-இல் வரையப்பட்ட சில்பியின் படங்களையும் ஒருங்கே காட்டியது அந்தத் தொடர்!

ஒரு புதிய பகுதி  தொடங்கினால், விகடனில் அதைப்பற்றி ‘உபயகுசலோபரி’ என்ற கட்டுரையில் சிலசமயம் விளக்குவது உண்டு.

அது இருக்கட்டும், அந்தக் கட்டுரைத் தலைப்புக்கு என்ன பொருள் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? இதற்கு, 1933 மார்ச்சில் வந்த முதல் ‘உபயகுசலோபரி’யே பதில் சொல்கிறது!

“  இந்தத் தலைப்பு எப்படி ஏற்பட்டது என்ற வரலாற்றை நேயர்கள் அறிந்துகொள்ள விரும்பலாம். ஒரு பெண்மணி எனக்கு எழுதிய கடிதத்தில் ‘உபயகுசலோபரி’ (இதற்குப் பொருள் எனக்குத் தெளிவாய் விளங்காவிட்டாலும், தங்களுக்குத் தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையோடு எழுதியிருக்கிறேன்.)’ என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில், ‘உபயகுசலோபரி’யின் பொருள் அதுவரை எனக்கும் நன்கு விளங்காமலிருந்தது. பிறகு விசாரித்ததில் , ‘இவ்விடமும் அவ்விடமும் க்ஷேமம். மேலே’ என்பதுதான் பொருள் என்று தெரியவந்தது. ஆகவே, நேயர்களுடன் சொந்த சமாசாரம் பேச ஆரம்பிக்கும்போது உபய குசலம் சொல்லிவிட்டு மேலே பேச்சைத் தொடங்குவது நல்லதல்லவா?”


மாமாங்கத்துக்கு மாமாங்கம்” என்ற புதிய பகுதியை  விளக்கும் ‘உபயகுசலோபரி’ப் பக்கமும்,  ‘ மாலி-சில்பி’ இருவரின் ஒரு கைவண்ண எடுத்துக் காட்டும் இதோ!


( மேலிருக்கும் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட படங்கள் என்னிடம் இல்லை! அதற்குப் பதிலாக இன்னொன்று இதோ!)



1933-இல் மாலி வரைந்த பாலக்காடு மணி ஐயரின் படத்தைப் பார்த்ததும், அதே வருடம்  சிறுவன் மணியை முதன்முதலில் பார்த்த ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி  ‘விகட’னில் எழுதியது நினைவுக்கு வருகிறது! 1933-இல் முசிரி சுப்பிரமண்ய அய்யரின் பாட்டுக் கச்சேரி கேட்கச் சென்ற ‘கர்நாடகம்’ ‘ஆடல் பாடல்’ பகுதியில் இப்படி எழுதினார்:

“ கச்சேரி தொடங்க வேண்டிய நேரத்திற்கு ஐந்து நிமிஷத்திற்கு முன், நீண்ட மூஞ்சியும், கிராப்புத் தலையும் உடைய ஒரு பையன் ஸில்க் ஷர்ட்டு அணிந்து வந்து மேடைக் கருகில் நின்றபோதே “இது பெரிய கை, ஸ்வாமி! இலேசல்ல” என்று அருகிலிருந்த நண்பரிடம் சொல்லிவிட்டேன்”

எப்படி? மாலி, சில்பி, ‘கல்கி’யின் கைகளும் இலேசல்ல, இல்லையா?


[நன்றி: விகடன்]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்: 

சங்கீத ‘ஜோக்ஸ்’!

சங்கதி -2 :”மாலி”யின் கைவண்ணம் 

அகாடமியில் மாலை ஆறு மணி 

சங்கீத முக பாவங்கள் : போட்டோ :மாலி

மாமாங்க மாறுதல்கள் ! ..மாலி-சில்பி

'சிரிகமபதநி’ -1

சங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

லா.ச.ராமாமிருதம் -3: சிந்தா நதி - 3

12. ஒரு யாத்திரை

லா.ச.ரா



லா.ச.ரா வின் ஒவ்வொரு கட்டுரைக்கும் பல அடிக் குறிப்புகள் வேண்டும் என்று எனக்கு அடிக்கடி தோன்றும். ஆங்கிலத்தில், ‘ ஆலஸ் இன் வொண்டர்லாண்ட்’ ( Alice in Wonderland) என்ற பிரபல ’சிறுவர்’ புத்தகத்திற்கு இப்படிப் பல அடிக்குறிப்புகள் எழுதி ‘அன்னொட்டேடட் ஆலஸ்’( Annotated Alice)  என்ற நூலையே மார்ட்டின் கார்ட்னர் எழுதியுள்ளார்! இதுபோல் லா.ச.ரா வின் ‘சிந்தா நதியை’யும் யாரேனும் விவரக் குறிப்புகள் சேர்த்து வெளியிட வேண்டும் என்று தோன்றுகிறது! ஒரு சின்ன முயற்சியாய்ச் சில குறிப்புகளைக் கீழ்க்கண்ட கட்டுரைக்குப் பின் எழுதியிருக்கிறேன்.

இந்தக் கட்டுரை வழக்கம்போல் தலைப்பு இன்றித் ‘தினமணி கதிரி’ல் வந்தது. நூலில் இது  12-ஆம் அத்தியாயம் .  மார்வாரிப் பெண்கள் கும்மியடிப்பதை அழகாய்ப் படமாக்கியிருக்கிறார் ஓவியர் உமாபதி. லா.ச. ரா எழுதுவது உரைநடைக் கவிதை தான் என்று நெருப்பின் மீது கைவைத்துச் சத்தியம் செய்பவர் பலர். இந்த ’உரைநடை’ நினைவலையில் ஓர் அடையின் ’கவிதை’ மிதக்கிறது!

=====

12. ஒரு யாத்திரை

முப்பத்து ஐந்து வருடங்களுக்கு முன், என் எழுத்தின் பாதிப்புக் காரணமாக எனக்கு ஒரு நண்பர் குழு சேர்ந்தது. கொத்தாக நாலு பேர். தாத்து, மாசு, செல்லம், வரதராஜன். இப்போதைய நிலவரம் தாத்து காலமாகி விட்டார். உத்யோக ரீதியில் செல்லம் எங்கேயோ? மாசுவும் வரதராஜனும் சென்னையில் இருப்பதால் தொடர்பு அறியவில்லை. அப்படியும் நானும் வரதராஜனும் சந்தித்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது.

வரதராஜன்- அதான் நா.சி.வரதராஜன்(1) கவிஞர். 'பீஷ்மன்' என்கிற புனைபெயரில் கதைக்ஞர்.

இவர்களுக்குள் நான்தான் மூத்தவன். அவர்களிடையே அவர்கள் ஏறக்குறைய ஒரே வயதினர். எல்லோருக்கும் பூர்வீகம் வில்லிப்புத்தூர். சிறு வயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்தவர். கொத்தாக ஒரே இடத்தில் குடியிருந்தனர்.

வரதராஜன் மட்டும் சிந்தாதிரிப்பேட்டையில். மாசு, நான் இன்னும் படித்து முடிக்க முடியாத ஒரு தனிப் புத்தகம், அவர் தன்மைக்கு இரண்டு மாதிரிகள் மட்டும் காட்டி நிறுத்திக் கொள்கிறேன்.

"உங்களைப் படித்ததன் மூலம் உங்களுடன் நேரிடையான பரிச்சயம் கிடைத்தது. நீங்கள் எழுதியவை அத்தனையும் நான் படித்தாக வேண்டும் என்பதில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். உங்களுடன் நேரப் பழகும் வாய்ப்புக்குப் பின் உங்களுக்கப்புறம்தான் உங்கள் எழுத்து."

அவருடைய தராசு தூக்கியே பிடித்திருக்கும். இப்படிச் சொன்னாரே ஒழிய அவர் என்னை விடாது படித்து வந்தவர். எனக்குத் தெரியும்.

நாங்கள் சந்தித்து இரண்டு வருடங்களாகியிருக்குமா? ஓரிரவு பத்து, பத்தரை- பதினொன்று. வாசற் கதவை மெதுவாகத் தட்டும் சத்தம். எழுந்து போய்த் திறந்தால், தெரு விளக்கு வெளிச்சத்தில் மாசு.

‘என்ன மாசு, இந்த நேரத்தில், என்ன விசேஷம்?' அவரை உள்ளே அழைப்பதா, அங்கேயே நிறுத்திப் பேசுவதா? சங்கடம்.

"ஒன்றுமில்லை. உங்களைப் பார்க்கணுமென்று என்னவோ திடீரென்று தோன்றியது. என்னால அடக்கவே முடியவில்லை. வந்தேன். பார்த்தாச்சு. போய் வருகிறேன்." மறு பேச்சுக்கே காத்திருக்கவில்லை. விர்ரென்று தெருக்கோடியில் மறைந்து விட்டார்.

அங்கேயே சுவரில் முகத்தை வைத்துக் கொண்டு விக்கி விக்கி அழுதேன். என் தங்கையை சிதையில் வைத்து விட்டு வந்திருக்கிறேன். இப்பவும் எரிந்து கொண்டிருப்பாள்.

நான் சொல்லி அனுப்பவில்லையே. இவருக்குத் தெரிய நியாயமோ, வழியோ இல்லையே! தங்கச்சாலைக் கோடி எங்கே, மீர்சாப்பேட்டை எங்கே? டெலிபதி? நரம்பு ஆட்டம்? இன்னதென்று புரியாமலே, ஏதோ

நரம்புக்கு நரம்பு அதிர்வில் வந்திருக்கிறார்?

கவிதை, வார்த்தைகளில் இல்லை, மடித்து எழுதும் வரிகளால் இல்லை.

நரம்புக்கு நரம்பு தன் மீட்டலில்தான் இருக்கிறதென்பதில் இனியும் ஐயமுண்டோ?

நாங்கள் சேர்ந்து இருந்த வரையில், அந்த நாளில் ஒரு 'ஜமா'. கையில் ஓட்டம் கிடையாது. அதனால் என்ன? கால் நடையில்லையா, இளம் வயது இல்லையா, உடம்பில் தென்பு இல்லையா, மனதில் உற்சாகம் இல்லையா?

ராச் சாப்பாட்டுக்குப் பின், சுமார் எட்டு மணிக்குக் கிளம்புவோம். அவர்கள்தான் என்னை அழைத்துப் போக வருவார்கள்- மாசு, தாத்து, செல்லம்; தங்க சாலைத் தெருக்கோடியிலிருந்து பேசிக்கொண்டே, மரீனாவுக்கு நடந்து, அதன் வழியே டவுன், தங்கச் சாலைத் தெருவில் ஒரு குஜராத்தி பவனில் பூரி, பாஜி, அரைக் கப் பால். (மலாய்! மலாய்!) பேசிக்கொண்டே, கோவிந்தப்ப நாயக்கன் தெரு விளக்கு வெளிச்சத்தில் இரவு பகலாகியிருக்கும். கை வளையலும், பாதக் கொலுசும் குலுங்க, விதவித வர்ணங்களில் மேலாக்குகள் சுழல, மார்வாரிப் பெண்கள் கும்மி அடிக்கையில் இது என்ன செளகார் பேட்டையா, பிருந்தாவனமா?

மீண்டும் மரீனா பீச், நள்ளிரவில் பட்டை வீறும் நிலா. லேசான குளிர். பேசிக்கொண்டே பைக்ராபட்ஸ் ரோடு, விவேகானந்தர் இல்லம், ஐஸ் ஹவுஸ் ரோடு, மீர்சாப் பேட்டை, பெசண்ட் ரோட்டில் என் இல்லத்தில் என்னை விட்டுவிட்டு, அங்கே வாசலிலேயே ஒரு நீண்ட ஆயக்கால்- மணி இரண்டு- பிரியாவிடை பெற்றுக் கொண்டு கால் நடையாக அவர்கள் மீண்டும் தங்க சாலைத் தெருவுக்கு.

ஞாயிற்றுக்கிழமை, அத்தனைபேரும் சிந்தாதிரிப் பேட்டையில் வரதராஜன் வீட்டில் காம்ப். அவருடைய தாயார், அக்கா, அண்ணா மன்னி- அத்தனை பேருமா அப்படி ஒரு பிரியத்தைக் கொட்டுவார்கள்! ஒரு சமயமேனும் ஒருத்தருக்கேனும், ஒரு சிறு முகச்சுளிப்பு? ஊஹூம். இப்படிச் சந்தேகம் தோன்றினதற்கே என்ன பிரயாச்சித்தம் செய்துகொள்ள வேண்டுமோ?

-பேசுவோமோ, பேசுவோமோ என்ன அப்படிப் பேசுவோமோ இலக்கியம், சினிமா, ஆண்டாள், ஸைகல்(2), கம்பன். 'துனியா ரங்க ரங்கே(3)', ஆழ்வாரதிகள், பாரதி, ராஜாஜி, ஆக்(4), அத்வைதம், விசிஷ்டாத்வைதம், பேச்சு எங்கெங்கோ தாவி, எங்களை இழுத்துச் செல்லும் தன் வழியில் பலகணிகள் ஏதோதோ திறக்கும். புது வெளிச்சம் புது சிருஷ்டிகள். திறந்து மூடுகையில், புதுக் கூச்சங்கள். வியப்பாயிருக்கும் ஆனந்தமாயிருக்கும் சில சமயங்களில்- பயமாயிருக்கும்.

பசி அடங்கி, வயிறு நிரம்புவது போல் மனம் நிறைந்து மோனம் ஒன்று எங்கள் மேல் இறங்கும் பாருங்கள், எத்தனை பேச்சும் அதற்கு ஈடாக முடியுமா?

அந்த உலகம் எங்களுக்காக மீண்டும் இறங்கி வருமா? வாழ்க்கையின் பந்தாட்டத்தில், அவரவர் சிதறி, 'ஜமா' தானே பிரிந்துவிட்டது.

ஆனால் நாங்கள் எல்லோரும் ருசி கண்டுவிட்ட பூனைகள். எங்களுக்கு ருசி மறக்காது.

போன தடவை நான் பீஷ்மனைச் சந்தித்தபோது அவர் திருவல்லிக்கேணிக்குக் குடி மாறிவிட்டார். பேச்சு வாக்கில் நான்,

"வரதராஜன்! அந்த நாள் உங்கள் வீட்டு அடை டிபன் மறக்க முடியுமா? வரட்டி போல், விரைப்பான அந்த மொற மொறப்பு, இடையிடையே ஜெவஜெவ வென மிளகாய், அப்படியே கல்லிலிருந்து தோசைத் திருப்பியில் எடுத்து வந்து வாழையிலைப் பாளத்தில் விடுகையில், பளப்பளவென எண்ணெயில் அந்த நக்ஷத்ர மினுக்கு.

"அதன் மேல், மணலாய் உறைந்த நெய்யை உங்கள் அம்மா விட்டதும், அது உருகுகையில் உஸ் அப்பா!" அந்த நினைப்பின் சுரப்பில் தாடை நரம்பு இழுக்கிறது. கன்னத்தை அழுத்திப் பிடித்துக்கொண்டேன்.

"உங்காத்து அடை அதுபோல வார்த்துப் போடச் சொல்லுங்களேன்!"

புன்னகை புரிந்தார். "நீங்கள் அடையின் பக்குவத்தையா சொல்கிறீர்கள்? அதன் கவிதையை அல்லவா பாடுகிறீர்கள்! இவளை அடை பண்ணச் சொல்கிறேன். இவளும் நன்றாகப் பண்ணுகிறவள்தான். ஆனால் நீங்கள் கேட்கிற அந்த அடை உங்களுக்குக் கிடைக்காது. அந்த மனுஷாள் இப்போ இல்லை. போயாச்சு!"

மேலெழுந்தவாரியில் இது ஒரு சாப்பாட்டு ராமமாகப் பட்டால், இதன் உயிர்நாடி அடையில் இல்லை.

அந்த மனுஷாள் இப்போ இல்லை. போயாச்சு!

சிந்தா நதியில் ஒரு யாத்திரை.
* * *


அடிக்குறிப்புகள்:

1. அமரர் நா. சீ.வரதராஜன் . பாரதி கலைக் கழகத்தின் கவிமாமணி பட்டம் பெற்றவர்.
புனைபெயர்: ‘பீஷ்மன்’ ; பிறப்பு: 20.5.1930
கவிதை நூல்கள்: அஞ்சலிப் பூக்கள், கானூர் கந்தன் திருப்புகழ், எண்ணத்தில் பூத்த எழில் மலர்கள், வெளிச்ச வாசல்கள்
சிறுகதைத் தொகுப்புகள்: ஆத்மாவின் மன்னிப்பு, தூவானம், நாதக் கனல், தேனிலவுக்கு வந்தவர்கள், இருட்டில் ஒரு விடிவு

[ நன்றி: பாட்டுப் பறவைகள், தொகுப்பாசிரியர்: பாரதி சுராஜ், ராஜேஸ்வரி புத்தக நிலையம் ]

உதாரணமாய்,  நா.சீ. வ வின் ஒரு கவிதை:


அக்கறை 

நா.சீ. வ 

புதுஇடத்தில் புது வீடு புது மனைவி
புது வாழ்க்கை மதுகுடித்த நிலையிலொரு
மயக்கத்தில் சுக வேட்கை
நண்பரொரு பொறியாளர், நன்றமைத்த வீட்டினிலே
பண்பரவத் தென்றலுடன் பளிச்சென்று வெளிச்சம் வர
உல்லாசமாய் வாழ்க்கை ஓடிக்கொண்  டிருக்கிறது
சல்லாபத் தனிமையினைத் தகர்க்கின்ற கீச்சொலியைக்
கேட்டவனின் பார்வை கீழ்மேலாய் அலைகிறது.
வீட்டினொரு மூலையிலே விர்ரென்று பறக்கின்ற
குருவிகளின் கூச்சல் கூடுகட்டும் வேலையங்கே
விரைவாய் எழுந்தவனும் விரட்டக்கை யோங்குகிறான்
விலக்குகிறாள் அவன் துணைவி ,வேண்டாங்க என்கின்றாள்
கலக்கமவள் முகத்தினிலே. கலங்காதே புது வீட்டில்
அவற்றுக்கும் குடியிருப்பொன் றமையட்டும் எனச்சிரித்தே
இவற்றுக்கும் இல்வாழ்க்கை இனிதாகுக என்றான்.
தன்னவளின் முகம் பார்த்து தனிமுறுவல் அவன் முகத்தில்
சின்னாளில் கூட்டைமிகச் செப்பமுடன் கட்டிவிட்டுக்
கீச்கீச்சென் றொலியும்சங் கீதமங்கே இசைக்கிறது
பேச்சுத் துணையிதென்று பெண்சிரித்தாள் அவன் மகிழ்ந்தான்
மழைக்காலம் இடியோடு வானத்தில் மின்னொளியும்
இழைக்கோலம் போட்டொளிய, இடையின்றி மழை பொழிய
குருவிகளும் சுகமாகக் கூண்டிற்குள் ளேபதுங்க,
அருவியென முற்றத்தில் அப்படியோர் மழை வெள்ளம்
வானம் பிளந்ததுபோல் மழை தொடர்ந்து பெய்கிறது
ஏனிப்படி யென்றான் எரிச்சலுடன் அவன். அவளோ
பாருங்கள் இதையென்றே பகர்ந்தாள் அவன் சென்றான்
ஓரங்களில் சுவரில் ஓழுகுகின்ற நீர்கண்டான்
நேருயரே மேற்சுவால் நீர்படிந்து சொட்டுவதை
பொறியாளர் திறமையிஙகு பொத்தல்கண்டு விட்டதெனில்
கும்மாளம் கீச்சொலிகள் குறையொன்றும் இல்லாமல்
செம்மாந்தப் புள்வீடு சிரிக்கிறது மூலையிலே.

[ நன்றி: கவிமாமணி இலந்தை இராமசாமி ]

2. ஸைகல் 

குந்தன் லால் ஸைகல். K. L. Saigal.  ’அந்த’க் காலத்தவருக்கு மிகப் பழக்கமான இந்திப் பாடகர். தமிழிலும் ஓரிரண்டு பாடி இருக்கிறார்!
1935  'தேவதாஸ்’ தமிழாக்கத்தில் -இல் “கூவியே பாடுவாய் கோமளக் கிளியே!’ கேட்கிறீர்களா?
http://www.youtube.com/watch?v=ZVU0pbXBNj4

3. துனியா ரங்க் ரங்கேலி 

1938- திரைப்படம் ஒன்றில் ஸைகல் மேலும் இருவருடன் பாடிய பிரசித்தமான பாடல்.
http://www.youtube.com/watch?v=_6ZQqHEB8kE



துர்கா ராகம் . இசை விமர்சகர் சுப்புடு சொல்வது போல், “ சுத்த சாவேரிக்குச் சுரிதர் போட்டால் துர்கா” . “பிருந்தாவனத்தில் நந்தகுமாரனும் “.... என்ன, நினைவுக்கு வருகிறதா?


4. ஆக் ---   இது 1948-இல் வந்த , ‘ராஜ் கபூர், நர்கிஸ்’ நடித்த இந்திப் படம் என்று நினைக்கிறேன்.  கால நிர்ணயம் சரியாய் இருக்கிறது.
http://www.imdb.com/title/tt0040067/



[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம் ]

தொடர்புள்ள பதிவுகள் :

லா.ச.ரா : படைப்புகள் 

நா.சீ.வரதராஜன்

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

துப்பறியும் சாம்பு - 6: ‘கோபுலு’வின் கைவண்ணத்தில் . . .

1. ஒரு வேலை போய் ஒரு வேலை வருகிறது!  




இதழியல் துறையில் ‘ஆனந்த விகடன்’ முத்தமிழின் பல   துறைகளில் முன்னோடியாகத் திகழ்ந்தது  . சித்திரத் துறையிலும் அப்படியே. ‘காரிகேசர்’ முதல் ‘காமிக்ஸ்’ வரை என்று விகடன் சித்திரங்களைப் பற்றித் தனியாக ஓர் ஆய்வுக் கட்டுரையே எழுதலாம். உதாரணமாக, தமிழ்ப் பத்திரிகை உலகில் வந்த முதல் படக்கதை  ”முத்து” எழுதிய  “ஜமீந்தார்  மகன்” என்கிறது விகடன் 'காலப்பெட்டகம்' நூல்; ஆனந்த விகடனில் தான்  அது  1956-இல் வெளியானது. படங்களை வரைந்தவர் “மாயா” என்ற “ ’இன்னொரு’ மகாதேவன்”. ( அப்போது “தேவன்” விகடனின் பொறுப்பாசிரியராய் இருந்தார்.) "முத்து” என்ற பெயரில் பல அருமையான சிறுவர் கதைகளை எழுதியவர் விகடன் உதவி ஆசிரியர்களில் ஒருவரான, “கோபு” கோபாலகிருஷ்ணன்.
[ ஓவியர் ‘மாயா’ ஒரு நேர்காணலில் , தான் ”பாலபாரதி” என்ற பத்திரிகையில்  ஓவியங்கள் வரைந்த “ வீர சிவாஜி” என்பதுதான் தமிழில் வந்த முதல் படக்கதை என்கிறார். ]

1957-இல் “தேவன்” மறைந்தபிறகு,  “தேவனி”ன் “துப்பறியும் சாம்பு” படக்கதை வடிவில் 58 ஏப்ரல் முதல் விகடனில் பவனி வந்தது.  கோபுலுவின் கைவண்ணத்தில் படக்கதை மின்னியது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. உண்மையைச் சொல்லப் போனால், இன்றைய தலைமுறையில் பலருக்கு “ராஜு” என்ற ஓவியர் தான் முதலில் “சாம்பு” வுக்கு உயிரூட்டியவர் என்றே தெரியாது! (அதாவது, என் ”சாம்பு” பதிவுகளையும், ராஜுவின் படங்களையும் பார்க்காதவர்கள்!:-)  “சாம்பு” என்றவுடனே அவர்களுக்குக் “கோபுலு”வின் படங்கள் தான் நினைவுக்கு வரும்!

எனக்குத் தெரிந்து “கோபுலு”வின் கைவண்ணத்தில் இந்தப் படக்கதை மீண்டும் ஒருமுறை ஒரு விகடன் பிரசுரத்தில் ஜொலித்தது. எந்த இதழில் தெரியுமா? 1997- முதல் 99- வரை  மாலைக் கதிரவனாய் ஒளிவிட்ட ( மாலையில் வெளியான)  “ விகடன் பேப்பர்” என்ற நாளேடு! ( ”சுஜாதாட்ஸ்”, “சுப்புடு தர்பார்” போன்ற  பிரபலமான பத்திகள்  வந்ததும் அதில்தான்!)

படக்கதை என்று தெரிந்து ஒரு கதையை உருவகிப்பது ஒரு வழி; ஏற்கனவே பிரபலமான ஒரு சிறுகதைத் தொடரைப் படக்கதையாக்குவது இன்னொரு, மிகக் கடினமான விஷயம். அதுவும், “தேவ”னின் ஹாஸ்யம் குலுங்கும் சம்பாஷணைகள் நிறைந்த ஒரு கதை வேறு!  செய்யுளில் “உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்” என்ற ஒரு வகை என் நினைவுக்கு வருகிறது. செய்யுளின் நடு நடுவே உரைநடை வரும். சிலப்பதிகாரம் ஒரு நல்ல முன்னோடி, எடுத்துக் காட்டு. அப்படித்தான்,  நம் படக் கதைகளும்! “உரையிடை இட்ட படமுடைக் கதை” !

எனக்கு ஓர் ஆசை! பத்து ஓவியர்களை ஒன்றாய்த் திரட்டி, ஒவ்வொருவருக்கும் அதே ‘சாம்பு’ கதையைக் கொடுத்து, இத்தனை  படங்களுக்குள், இத்தனை மணிகளுக்குள்  கதையைச் சித்திரிக்கவேண்டும் என்று நிபந்தனை போட்டு, விளைவுகளைப் பார்க்க வேண்டும்.....  படக் கதைகள் மேலும் மேலும் வளர பல விதமான யுக்திகள் வெளியாகலாம்! தமிழ் காமிக்ஸ் இன்னும் தவழும் குழந்தையாகத்தானே இருக்கிறது !  மேலும் வளர வேண்டிய கலை அல்லவா?

சரி! ஓர் எடுத்துக் காட்டாகச் “சாம்பு”வின் முதல் கதையைப் பார்க்கலாமா?  பிறகு, நீங்களே புரிந்து கொள்ளலாம்.  இந்தச் சாம்புவைக் காமிக்ஸ் அவதாரத்தில் உலவ விடுவது  எவ்வளவு கடினம் என்று?  ( இந்தப் படக்கதை ஒரு நூலாக இன்னும் வெளிவரவில்லை என்பதை நினைவூட்டுகிறேன்! )

1. ஒரு வேலை போய் ஒரு வேலை வருகிறது!  
என்ற முதல் கதை இதோ!

மானேஜர் செய்தார்தி ருட்டு -- சாம்பு
  வாசனை மோந்துடைத் தானவர் குட்டு !
ஆனால் கிடைத்ததோ திட்டு! -- துப்(பு)
  அறியத் தொடங்கினான் வேலையை விட்டு!    









சரி, ‘சாம்புவை’ நெட்டுருப் போட்ட வாசகர்களுக்கு  ஒரு கேள்வி:

இந்த முதல் கதையில் சாம்புவை வேலையிலிருந்து நீக்கிய  அதே முதலாளி --- கதையில், பாங்கி டைரெக்டர் பரமேஸ்வர முதலியார்... பிறகு தனக்கு வந்த ஒரு பிரச்சினையிலிருந்து விடுபட, அப்போது பிரபல துப்பறியும் நிபுணனாகியிருந்த  சாம்புவைக் கூப்பிடுவார், தெரியுமா?

அது என்ன ‘கேஸ்’? எந்தக் கதையில் இது நடக்கிறது?


[நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

துப்பறியும் சாம்பு: மற்ற பதிவுகள்

தேவன் படைப்புகள்

திங்கள், 11 பிப்ரவரி, 2013

பி.ஸ்ரீ -2: சித்திர ராமாயணம் -2

புதிய நண்பன் 
பி.ஸ்ரீ.



கம்பனைக் காண அறிஞர் பி.ஸ்ரீக்கு வழிகாட்டியவர்கள் யார்?
கம்பன் கலைக் கோவிலுக்கு ஒரு கலைவிளக்கு” என்ற நூலின் முகவுரையில் பி.ஸ்ரீ. யே இதற்குப் பதில் சொல்கிறார்.

கல்வி சிறந்த தமிழ்நாடு -- புகழ்க்
   கம்பன் பிறந்த தமிழ்நாடு --

என்றான் மகாகவி பாரதி. பாரதியின் இந்த அடிகள் கம்பனில் யாருக்கும் ஒரு ஈடுபாட்டைத் தோற்றுவிக்கும் எனக்கும் அவ்வாறே. .... அடுத்தபடியாகக் கம்பனைக் காண எனக்கு வழிகாட்டியவர் ஆராய்ச்சிப் பேரறிஞர் வையாபுரி பிள்ளை. ... அவரைப் பின்பற்றியே கம்பனை இலக்கிய ஆராய்ச்சி முறையில் அணுகவும் கற்கவும் முனைந்தேன்”

என்கிறார் பி.ஸ்ரீ.

சரி, தமிழ்நாட்டிற்கு வந்த ராமதூதர்கள் அடுத்து என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாமா?








[ நன்றி: விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

முந்தைய பதிவு :

தமிழகத்திலே ராமதூதர்கள்

தொடர்புள்ள பதிவுகள்:

பி. ஸ்ரீ படைப்புகள்

[நன்றி: விகடன்] 

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

பதிவுகளின் தொகுப்பு: 101 - 125

பதிவுகளின் தொகுப்பு: 101 - 125



101. தென்னாட்டுச் செல்வங்கள் - 1
http://s-pasupathy.blogspot.com/2012/11/1_30.html

102.தென்னாட்டுச் செல்வங்கள் - 2
http://s-pasupathy.blogspot.com/2012/12/2.html

103.மனம் போன போக்கில் : கவிதை
http://s-pasupathy.blogspot.com/2012/12/blog-post.html

104. துப்பறியும் சாம்பு -5: ‘மடையன் செய்கிற காரியம்‘
http://s-pasupathy.blogspot.com/2012/12/5.html

105. தென்னாட்டுச் செல்வங்கள் - 3
http://s-pasupathy.blogspot.com/2012/12/3.html

106. பாடலும், படமும் - 1: வெள்ளைத் தாமரை . . .
http://s-pasupathy.blogspot.com/2012/12/1_11.html

107. தென்னாட்டுச் செல்வங்கள் -4
http://s-pasupathy.blogspot.com/2012/12/4.html

108. சங்கீத சங்கதிகள் - 1
http://s-pasupathy.blogspot.com/2012/12/1_15.html

109. தென்னாட்டுச் செல்வங்கள் - 5
http://s-pasupathy.blogspot.com/2012/12/5_17.html

110. சங்கீத சங்கதிகள் - 2
http://s-pasupathy.blogspot.com/2012/12/2_19.html

111. சங்கீத சங்கதிகள் - 3
http://s-pasupathy.blogspot.com/2012/12/3_22.html

112. சங்கீத சங்கதிகள் - 4
http://s-pasupathy.blogspot.com/2012/12/4_24.html

113. சங்கீத சங்கதிகள் - 5
http://s-pasupathy.blogspot.com/2012/12/5_27.html

114. தென்னாட்டுச் செல்வங்கள் - 6
http://s-pasupathy.blogspot.com/2012/12/6_28.html

115. சங்கீத சங்கதிகள் - 6
http://s-pasupathy.blogspot.com/2012/12/6.html

116.பாடலும் படமும் - 2: திருப்பாவை
http://s-pasupathy.blogspot.com/2013/01/2.html

117. சங்கீத சங்கதிகள் - 7
http://s-pasupathy.blogspot.com/2013/01/7.html

118. தென்னாட்டுச் செல்வங்கள் -7
http://s-pasupathy.blogspot.com/2013/01/7_4.html

119. சங்கீத சங்கதிகள் - 8
http://s-pasupathy.blogspot.com/2013/01/8.html

120. சங்கீத சங்கதிகள் - 9
http://s-pasupathy.blogspot.com/2013/01/9.html

121. சங்கீத சங்கதிகள் - 10
http://s-pasupathy.blogspot.com/2013/01/10.html

122. பாடலும் படமும் - 3 : சூரியன்
http://s-pasupathy.blogspot.com/2013/01/3.html

123. சசி - 4: பொங்கல் இனாம்!
http://s-pasupathy.blogspot.com/2013/01/4_14.html

124. சங்கீத சங்கதிகள் - 11
http://s-pasupathy.blogspot.com/2013/01/11.html

125. பதிவுகளின் தொகுப்பு: 1-100
http://s-pasupathy.blogspot.com/2013/01/1-100.html


தொடர்புள்ள பதிவுகள்:

பதிவுகளின் தொகுப்புகள்

வியாழன், 7 பிப்ரவரி, 2013

சங்கீத சங்கதிகள் - 15

தியாகராஜரும் தமிழும் 
பசுபதி


”ஸங்கீத ஸரிகமபதநி”  என்ற இசை-நாட்டிய மாத இதழைப் பார்த்திருக்கிறீர்களா? அதைப் பற்றி ரா.கி. ரங்கராஜன் ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார்.

“ கர்நாடக சங்கீதத்தின் மேம்பாட்டுக்காகப் பாடுபடும் பத்திரிகைகளில் ஒன்று 'ஸங்கீத ஸரிகமபதநி'. நல்லி குப்புசாமி செட்டியார் இதன் தலைமைப் புரவலர்.(மாத இதழ் என்று சொல்லிக்கொள்கிறதேயொழிய அப்படியொன்றும் இது ரெகுலராக வருவதாய்த் தெரியவில்லை.) ரொம்ப மேதாவித் தனமான சங்கீத நுணுக்கங்களுக்குள் புகுந்து என்னைப் போன்ற சாமானியனின் மூளையை சிரமப்படுத்துவதில்லை இந்த இதழ். சங்கீத மேதைகளின் வாழ்க்கை வரலாறுகளை சிறு சிறு துணுக்குகளுடன் சேர்த்துத் தருகிறது. அதே சமயம், கொஞ்சம் வம்பு தும்புகளையும் வெளியிடுகிறது. “ 


என்று தொடங்கி எழுதியிருக்கிறார்.  சாதாரணமாக இந்த இதழில் ஜோக்குகள் வருவதில்லை. ஆனால், பாருங்கள்! நானும் பல இதழ்களைப் படித்திருக்கிறேன். என் கண்ணில் படாத ஒரு ஜோக் ரா.கி.ரங்கராஜனின் கண்ணில் பட்டிருக்கிறது! 

 'என் அப்பா சங்கீத வித்வான். அம்மாவும் பாடுவாள். அண்ணனுக்கு மிருதங்கம் வாசிக்கத் தெரியும். அண்ணி வீணை வாசிப்பாள்...'

 'சரி, நீ என்ன பண்ணறே?'

 'தனிக் குடித்தனம் வந்துட்டேன். வேறென்ன பண்றது?'

அது சரி,”தியாகராஜரும் தமிழும்” என்ற கட்டுரைக்கு வருவோம்.இது ”ஸரிகமபதநி” பத்திரிகையில் டிசம்பர் 98-இல் வெளியானது. மீண்டும் ஒருமுறை 2005-இல் வெளியிட்டார்கள் . ( இந்தக் கட்டுரையின் கடைசியில் என் வெண்பா-முயற்சி ஒன்று மூலத்தில் இருந்தது. இப்போது பார்த்தால், அது வெண்பா இல்லை என்று தெரிந்தது :-((! அதனால் அதை ‘சென்ஸார்’ செய்துவிட்டு இன்னொரு முயற்சியைக் கட்டுரைக்குப் பின் சேர்த்துள்ளேன்:-))!) மற்றபடி அந்த முழுக் கட்டுரையும் , அந்த இதழின் அட்டைப்படமும் இதோ! 

( கட்டுரையை ஆசிரியரிடம் அனுப்பியபோது, எஸ்.ராஜம் அவர்களிடம், கோபால கிருஷ்ண பாரதி தியாகராஜரைச் சந்திப்பது போல் ஒரு சித்திரம் வரையச் சொல்லி, அதை வாங்கிப் பிரசுரிக்க விண்ணப்பித்தேன்; கட்டுரையில்  நான் விரும்பிய இருவரும் உள்ளனர்; ஆனால் ஒன்றாக இல்லை!  ) 





இசையுலக மாளிகையில் இன்றுபலர் நல்ல
பசையுடனே வாழ்வதற்குப் பாடல் பலஎழுதக்
காசெதுவும் கேட்காத கண்ணியனை ஸ்ரீத்யாக
ராசனென ஏத்துதல் நேர். 


[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort.  Or download each image in your computer and then read.  ]



தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள் 

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

சசி - 5: பைத்தியம்!

பைத்தியம் !
சசி





[நன்றி: விகடன்]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சசி: மற்ற சிறுகதைகள்

சனி, 2 பிப்ரவரி, 2013

சாவி -8: ஆராய்ச்சி ஆர்.வி.ராமன்

ஆராய்ச்சி ஆர்.வி.ராமன்
சாவி

                                                 


மெஹந்தி, ஹென்னா என்று பல பெயர்களில் , பேஸ்ட், கூம்பிய ‘கோன்’ ( cone) என்று பல உருவங்களிலும் இன்று கிடைக்கும் மருதாணியைப் பற்றி அன்றே ஆய்வு செய்த ஒரே முன்னோடி ஆய்வாளர் ‘சாவி’யின் ஆர்.வி.ராமன் தான்!  மேலே படியுங்கள்!
        
[ அசல்: கோபுலு;  நகல்: சு.ரவி ] 


” அது ஒரு கிராக்கு சார்ஆராய்ச்சி பண்றதாம் ஆராய்ச்சிஎப்பக் கண்டாலும் வீட்டு நிறைய தழைபுல்லுபூச்சி இதையெல்லாம் குவிச்சு வெச்சுண்டு பூதக்கண்ணாடியிலே பார்த்துண்டிருக்குதுவேளையிலே சாப்பிடறதில்லைராத்திரியெல்லாம் தூங்கறதில்லேஏதோ பெரிசா புரட்டிடற மாதிரி ஆகாசத்தை வெறிச்சு வெறிச்சுப் பாக்கறதுஇதான் அதுக்கு வேலைஎம்.படிச்சிருக்குஎன்ன பிரயோஜனம்ஒழுங்கா ஓர் உத்தியோகத்துலே சேர்ந்து குடியும் குடித்தனமுமா வாழக்கூடாதுமனைவியை மாமனார் வீட்டிலேயே விட்டு வைத்துட்டு காடு மலையெல்லாம் அலைஞ்சுண்டிருக்குதுகேட்டால் 'ரிஸர்ச்பண்றதாம்ஏதோ பெரிசா கண்டு பிடிச்சுடப் போறதாம்மனசிலே ஐன்ஸ்டீன்சி.விராமன்னு நினைப்புஅதுக்காக ஆர்வெங்கட்ராமன்கிற தன் பெயரை ஆர்.விராமன்னு சுருக்கி வைத்துக்கொண்டிருக்கிறது.

''ஒரு நாளைக்கு என்ன செஞ்சுது தெரியுமோகாட்டிலே இருக்கற 'மருதாணி'த் தழையையெல்லாம் வெட்டிண்டுவந்து ஆட்டுக்கல்லுலே போட்டு அரைச்சிண்டிருந்தது.


''இதெல்லாம் என்னடான்னு கேட்டேன்அந்தக் கிராக் சொல்றதுமருதாணியை மாவா அரைச்சு உலர்த்திப் பவுடர் பண்ணி அதை க்யூடெக்ஸுக்குப் பதிலா உபயோகப் படுத்தறதுக்கு ஆராய்ச்சி நடத்திண்டிருக்கானாம்அதை வெளிநாட்டுக்கெல்லாம் அனிப்பிச்சா லட்சம் லட்சமாப் பணம் வருமாம்டாலர் எர்னிங் பிஸினஸாம்எப்படியிருக்கு பார்த்தயோன்னோ இதும் புத்திஇது உருப்படுமான்னு கேக்கறேன்.


[ ஓவியம்: நடனம் ]


''இதுக்கு முன்னே ஒருதடவை இப்படித்தான் இன்னோர் ஆராய்ச்சி நடந்திண்டிருந்ததுஎன்னடா இதெல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்கேன்னேன். 'உனக்கு ஒண்ணும் தெரியாதுமாமாஇது மட்டும் ஸக்ஸஸ் ஆகாட்டா என் தாடியை எடுத்துடறேன் பாருன்'னு சபதம் பண்றது!


''இது தாடியை எடுத்தால் தேவலையாஎடுக்காட்டாத் தேவலையாஒரு நாளைக்குத் தாடி வெச்சுண்டு வரும்இன்னொரு நாளைக்குத் தாடியை எடுத்துட்டு வரும்இதுதான் சுத்த பைத்தியமாச்சே!


''முன்னே ஒரு தடவை ஊரிலே இருக்கிற பழைய 'பியூஸ்போன பல்பெல்லாம் தெருத் தெருவா அலைஞ்சு விலைக்கு வாங்கிக்கொண்டு வர ஏற்பாடு பண்ணித்து.


''ஏதாவது பழைய 'பல்ப்வியாபாரம்தான் பண்ணப் போறதோன்னு நினைச்சேன்இது என்ன பண்ணித்து தெரியுமோலட்சம் பல்பு சேர்ந்தப்புறம்தான் ரகசியத்தை வெளியே விடுவேன்னுது.


''கடைசியா ஓர் அமாவாசை அன்னிக்கு இருபது முப்பது பேரை அழைச்சுண்டு எங்கேயோ நடுக்காட்டிலே போய் அங்கே பறக்கிற மின்மினிப் பூச்சியெல்லாம் புடிச்சிண்டு வந்து காலி பல்புகளில் அடச்சு மூடிட்டுது. 'மாமாமின்சாரமில்லாமலேயே எரியக்கூடிய மின் விளக்குகளைக் கண்டுபுடிச்சுட்டேன் இத பாரு'ன்னு மின்மினிப் பூச்சியை அடைச்சு வெச்ச பல்பைக் கொண்டுவந்து காண்பிக்கிறது.


''ஏண்டாபூச்சி செத்துப்போயிட்டா என்னடா பண்ணுவேன்னேன்இந்தியாவிலே மின்மினிப் பூச்சிக்குப் பஞ்சமே கிடையாதுஎவ்வளவு வேணுமானாலும் கிடைக்கும்அப்படியே கிடைக்காவிட்டாலும் பட்டுப்பூச்சிகளை உற்பத்தி பண்ற மாதிரி மின்மினிப்பூச்சிப் பண்ணை ஒன்று நடத்தி உற்பத்தி செய்துக்கலாங்கறது.


''ஏண்டா உனக்கு தலையெழுத்துஒழுங்கா ஒரு வேலைக்கு போயேண்டா'ன்னா, 'உனக்குத் தெரியாது,  மாமாஇது மட்டும் ஸக்ஸஸ் ஆச்சுன்னா லட்சம் லட்சமாப் பணம் புரளுங்கறது.


''ஒரு மாசம் கழிச்சு புதுசா இப்ப என்னடா ஆரம்பிச்சிருக்கேன்னு கேட்டேன்.''


''மாமாஎன்கூட ஒரு ஆறு மாசம் மலபார்லே வந்து இருக்கயா?ன்னான்.


''மலபார்லே என்னடா ஆராய்ச்சின்னேன்அங்கே வாழைத்தோப்பெல்லாம் காண்ட்ராக்ட் எடுக்கப்போறானாம்வாழைப்பழங்களையெல்லாம் உரித்து வெயிலில் உலர்த்தி பவுடராப் பண்ணி டப்பாவில் அடைத்து அமெரிக்காவுக்கு அனுப்புவானாம்அந்தப் பவுடர்லே அவங்க தண்ணியைத் தெளிச்சா பழப்பவுடர் மறுபடியும் வாழைப்பழமாக மாறிவிடுமாம்இப்படி ஒரு திட்டம் வெச்சிருக்கேன்னு பயமுறுத்தறான்.


''இதைப்போல இன்னும் என்னென்னவோ ஐடியாவெல்லாம் இருக்காம் அவனிடம்ஒரு நாளைக்கு எருக்கஞ்செடி பக்கத்திலே போய் உட்கார்ந்துண்டிருந்ததுஏன் தெரியுமோஅந்தச் செடியிலேருந்து பஞ்சு வெடிச்சு வருமாம்அந்தப் பஞ்சுலேருந்து ரேயான் நூல் மாதிரி தயார் செய்துஅதுக்கு 'எருக்ரேயான்'னு பேர் வைக்கப்போறானாம்இதன் ஐடியாவிலே எருக்கை வெட்டி அடிக்க!


''அப்பளத்து மாவில் கோந்தும்பாகும்மிளகுப்பொடியும் கலந்து இண்டியன் சுயிங்கம் தயார் பண்றதுக்கு ஒரு திட்டமாம்குடமிளகாய்ச் செடிக்கு தேன் இஞ்செக்‌ஷன் பண்ணி ஸ்வீட் குடமுளகாய் செய்றதுக்கு ஒரு திட்டமாம்.


''வீணாகப் போகும் ரம்பத்தூளை வஜ்ரத்தில் கலந்து மர அட்டைகள் செய்வதற்கு மற்றொரு திட்டமாம்இப்படி ஆயிரம் திட்டம் வைத்திருக்குதாம்.


''திடீர்னு இப்போஇருக்கிற குளத்திலேயெல்லாம் இறங்கி அங்கே இருக்கும் பாசியெல்லாம் வாரி வாரிச் சேகரம் பண்ணிண்டிருக்குது.
          


''இது எதுக்குடான்னு கேட்டேன்இது ஒர் ஆராய்ச்சிமாமாகுளத்துப் பாசியைக் கொண்டு வந்து ஒரு தொட்டியிலே கொட்டி மூடிவைத்தால்அதிலே பூஞ்சக்காளான் புத்து வருமாம்அதை வைத்துக்கொண்டு பெனிஸிலின் மாதிரி ஒரு பாசிலின் மருந்து கண்டுபிடிக்கப் போறானாம்கான்ஸருக்கு இது கைகண்ட ஒளஷதமாம்இதுமட்டும் ஸக்ஸஸ் ஆயிடுத்துன்னா அவ்வளவுதான்இந்தியாவுக்கு வெளிநாட்டிலெல்லாம் ஒரே புகழ்தானாம்பாசிலின் கண்டு பிடிச்ச ஆர்.வி.ராமனுக்கு பாரத ரத்னம் பட்டங்கூடக் கிடைக்குமாம்.


''ஜவ்வாது மலைக்குப்போய் அங்குள்ள வாசனையெல்லாம் திரட்டி அதை மாத்திரைகளாக உருட்டிண்டு வரப்போறானாம்அணுப்பிரமாணம் உள்ள அந்த மாத்திரையைச் சாக்கடையிலே போட்டால் சாக்கடை நாற்றமெல்லாம் அப்படியே பறந்து போய்விடுமாம்சாக்கடைத் தண்ணியும் ஸ்படிகம் மாதிரி சுத்தமாயிடுமாம்அதைக் கண்டு பிடிச்சுட்டால் எருமை மாடுகளெல்லாம் இறங்கிக் குளிக்கறதுக்குச் சாக்கடைத் தண்ணி இல்லாமல் போயிடுமேன்னுதான் யோசிக்கிறானாம்இதன் ஆராய்ச்சியிலே தீயை வைக்க! “

[ நன்றி: சாவியின் ‘கேரக்டர்’ நூல் ]

தொடர்புள்ள பதிவுகள்:

சாவியின் படைப்புகள்