சனி, 20 பிப்ரவரி, 2016

மகாமகம் - 1945,1956

மகாமகம் 
[ ஓவியம்: சில்பி ]





2016-ஆம் ஆண்டில் மகாமகம் பிப்ரவரி 13, 14 நாட்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முந்தைய இரு மகாமகங்களைப் பற்றி விகடனில் வந்த சில தகவல்கள், கட்டுரைகள் இதோ! 

1) 

”பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பகோணம் மகா மக உற்சவம் 1945-இல் நடந்தது.. நேரில் சென்று அந்த உற்சவத்தில் கலந்துகொண்டு, அது பற்றிய ஒரு தொடர் கட்டுரையை வழங்கியுள்ளார் 'கதிர்'.” என்கிறது விகடனின் காலப் பெட்டகம் நூல்.

அந்தக் கட்டுரையிலிருந்து ஒரு பகுதியைத் தருகிறது அதே நூல்.
( “கதிர்” என்பவரின் இயற்பெயர் வெங்கடராமன் )  
மகா விசேஷம் -'கதிர்'

” மகாமக தாத்பர்யத்தைப் பற்றிப் படித்தபோது, கட்டாயம் அங்கு போய்த்தான் தீர்வது என்று நான் தீர்மானம் செய்துகொண்டேன்.
கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி, நருமதை, ஸரஸ்வதி, குமரி, பயோஷ்ணீ, சரயூ ஆகிய ஒன்பது நதிகளும் கன்னி ரூபத்தில் ஒரு சமயம் சர்வேச்வரனை நாடிச் சென்றார்களாம். ஈசுவரன் இந்த நவ கன்னிகைகளையும் ஆசீர்வதித்து, ''என்ன குழந்தைகளே விசேஷம்? எங்கே இப்படி ஒன்பது பேருமாகக் கிளம்பினீர்கள்?'' என்று கேட்டார்.
''பிரபுவே! தங்களுக்குத் தெரியாததல்ல. உலகில் பாவ கிருத்யங்கள் அதிகரித்து வருகின்றன. பக்தர்களாயிருப்பவர்கள் தங்களுடைய பாவங்களைப் போக்கிக் கொள்வதற்காக எங்கள் நதிகளில் ஸ்நானம் செய்கிறார்கள். இதனால் அவர்களுடைய பாவங்களெல்லாம் எங்கள் மீது சுமந்து கொண்டே வருகிறது. இப்படி எங்கள் மீது சேரும் பாவச் சுமையை நாங்கள் எங்கே போய்ப் போக்கிக் கொள்வது?'' என்று கேட்டார்கள்.
அப்போது ஈசுவரன் அந்தக் கன்னிகைகளுக்குக் குடந்தை சேத்திரத்தைக் குறிப்பிட்டு, ''பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை சிம்ம ராசியில் குரு சேரும்போது, அங்கு கும்ப லிங்கத்தினின்று தோன்றிய தடாகத்தில் ஸ்நானம் செய்யுங்கள். அதன் மூலம் உங்கள் பாவச்சுமையைப் போக்கிக் கொள்ளலாம்!'' என்று திருவுள்ளம் செய்தாராம். அதன்படி பன்னிரண்டு வருஷங்களுக்கொருமுறை கங்கை, யமுனை, காவேரி முதலிய கன்னிகைகள் அங்கு வந்து நீராடிச் செல்வதாக ஐதீகம். “

2)
பிறகு 56-இல் மீண்டும் ஒரு மகாமகம். ( 1956இல் மாசியிலேயே குருவும் சந்திரனும் சிம்ம ராசியில் சேர்ந்துவிட்டனர். எனவே, அந்த ஆண்டே - பதினொரு ஆண்டுகளே இடைவெளி ஆகியிருந்தபோதிலும் - மகாமகம் வந்துவிட்டது.)  


இள மாமாங்கம்!

பூமி சூரியனைச் சுற்றி வர 365 நாட்கள் ஆவதைப் போல, குரு சூரியனைச் சுற்றி வர 4332 நாட்கள் ஆகும். இது சரியாக 12 வருடங்கள் இல்லை. 11.868 வருடங்கள்தான்!
அதனால்தான் மகாமகம் சில சமயங்களில் 11 ஆண்டுகளிலேயே வந்துவிடும் என்கிறார்கள் வானியல் தெரிந்தவர்கள். 1929, 1600, 1683, 1778, 1861, 1956 வருடங்களில் பதினோரு வருட மகாமகம்தான் கொண்டாடப்பட்டதாம். இந்த மகாமகங்களை 'இளமாமாங்கம்' என்கிறார்கள்.
** 29.2.04 ஆனந்த விகடன் இணைப்பிதழிலிருந்து...

3)
1956-இல் விகடனில் வந்த ஒரு கட்டுரை இதோ! ய.மகாலிங்க சாஸ்திரி எழுதியது. 







[ நன்றி : விகடன் ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

ய.மகாலிங்க சாஸ்திரி


கருத்துகள் இல்லை: