வியாழன், 27 அக்டோபர், 2016

தீபாவளி மலரிதழ்கள் - 1

’திருமகள்’ 1942  தீபாவளி இதழிலிருந்து 

                                       

இரண்டாம் உலகப் போர் நடந்துவந்த சமயம்.

கடுமையான காகிதக் கட்டுப்பாடு . இருப்பினும் பல தமிழ் இதழ்கள் தீபாவளி சிறப்பிதழ்கள் / மலர்கள் வெளியிட்டன.


புதுக்கோட்டையிலிருந்து  வந்த இலக்கியப் பத்திரிகையான ’ திருமகள்’ பத்திரிகையின்  தீபாவளி இதழிலிருந்து  சில பக்கங்கள் இதோ.




ராசி. சிதம்பரம் என்பவர் நடத்திய பத்திரிகை இது. இராம. மருதப்பன் ஆசிரியர். ‘வல்லிக்கண்ணன்’ 1943-இல் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். ‘கண்ணதாசன்’ இந்தப் பத்திரிகையின் ஆசிரியராய்  1944-இல் பணி புரிந்திருக்கிறார்.


முதலில் அதன் அட்டைப்படம்.[ ஓவியர் : ஸாகர் ]




தலையங்கம்:

 

அக்டோபர் 42-இல் நடந்த தமிழிசை மாநாட்டைப் பற்றி . . .


கவியோகி சுத்தானந்த பாரதியாரின் கவிதை :


ஸ்வர்ணாம்பாளுக்கு எழுத ஆசை; புனைபெயர் வேண்டுமே? கணவர் பெயர் .... சுப்பிரமணிய ஐயர் ....  உதவிக்கு வந்தது.
ஸ்வர்ணாம்பாள் “குகப்ரியை” ஆனார்!  எழுதித் தள்ளினார்.

1933-இல் வாசன் அனுமதி பெற்று, ‘கல்கி’ விகடனில் 1000 ரூபாய் பரிசு கொண்ட நாவல் போட்டி வைத்தார்.  பத்திரிகை உலகில் முதல் பெரிய நாவல் போட்டி எனலாம். இரண்டு நாவல்கள் தேர்வுற்றன. அவற்றுள் ஒன்று “குகப்ரியை”யின் “சந்திரிகா”. பின்னர் விகடனில் அது தொடராக வந்து நூலாகவும் வெளிவந்தது. நாவலின் முகவுரையில் ’கல்கி’,
குகப்ரியையின் தமிழ்நடை உயிருள்ள நடை, தங்கு தடையின்றி இனிய நீரோட்டம்போல் செல்லும் நடை” என்று எழுதினார்.

இதோ , கடைசியாக, 42 திருமகள் தீபாவளி இதழில் வந்த  ”குகப்ரியை” அவர்களின் தீபாவளி பற்றிய கட்டுரை.





[ நன்றி : திருமகள் ] 

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
தீபாவளி மலர்


1 கருத்து:

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

உங்கள் வீட்டில் பெரிய நூல் கருவூலமே இருக்கும் போலும்! காணக் கிடைக்காத அரிய இதழ்கள்! மிக்க நன்றி ஐயா!